உன் வார்த்தைகள் தேங்காத
உள்பெட்டி தரும்
முன்பொரு காலத்தின்
கடிதப்பெட்டிகளின் வெறுமையை
நெஞ்சு பதைக்கச் செய்யும்
திரும்ப வராத புறாக்கள்
ஒலித்தடங்கும் அலைபேசி
மௌனங்கள்
விடுபடத் தவித்து
அறைச் சுவரில் மோதும் மனப்பறவை
ஏதேனும் வெறுப்புக் குறியேனும்
இட்டுப் போ
சிறு தாவரங்கள் உயிர் வாழும்
muthal pinnooddam enathu aakadddum. sorry for the thaminglish
ReplyDeleteநன்றிங்க தமிழ்!
ReplyDelete