Wednesday 2 April 2014

2012 மலைகள்.காம்


ந்த ஒரு வருடத்தில்
நரைத்த என் முடிகள் அதிகம்

அழுது வீங்கியவை போல
தூக்கமிழந்த கண்கள்

பசலையில் இளைத்த உடம்பு
பற்றிதான் இலக்கியங்கள் பேசுகின்றன
டிப்ரஷனில் ஊதி
வெடிக்கத் தயாரான
உடல்களை அவை சந்தித்ததில்லையோ-

குறி சொல்பவனிட்ம
கூட்டிப் போவதாக
சக தோழி சொல்கிறாள்

கொண்டவன் இருக்கும் திசையும்
அவன் மனநிலையும் நானறிவேன்

தெரியுமெனில் நேரில் சென்று
சமாதானம் பேசுவோம்
என்கின்றனர் பெரியோர்

அக்னியை வலம் வந்து
செய்த சத்தியத்தை மீற முடிந்தவனை-
வெற்று வார்த்தைகள் என்ன செய்துவிடும்?

நீங்களொருபொழுதும் என்
துன்பத்தைப் பகிர முடியாது

என் பசியைப் போல்
என் தூக்கத்தைப் போல்
என் காமத்தைப் போல்
என் தனிமையைப் போல்
அது நானே
அனுபவித்தறிய வேண்டிய ஒன்று
நானே அமிழவும் மீளவும்
வேண்டிய ஒன்று.
*
 
கடவுளைத் தொந்தரவு செய்யாததற்கு
-சில காரணங்கள்

அவளின் கனவுகள் விழி திறக்குமா
கோபித்துத் தூங்கிய மகளை
எப்படி சமாதானப்படுத்த

ஆஃபிஸ் கம்யூட்டரில்
அடைபட்ட கவிதையை
வாசிக்கச் சொல்லி
நடு நிசியில் நண்பன்

அதெப்படி
தூங்கிய பிறகு மழை பெய்யலாம்
-காலையில் வாதாடும் மகள்

உணவு இடைவேளை விவாதத்தில்
பொதுமைப்பட்டுவிடுகின்றன – எல்லாப்
பிள்ளைகளின் பிடிவாதங்களும்

வாய்பாடு சொல்லியே
வழக்கமாக நிறைவுறும்
வழிப் பயணங்கள்-
வானத்தில் தோன்றும் colour ball-ம்
சிமிட்டும் நஷத்ரங்களும்
தினத்தை அழகாக்குகின்றன

வருடங்களைஉதைத்து
நொடிகளைச் சுவைத்து -
நானும் மகளும்
மகளும் நானும்
விளையாடும் பந்து போல
வாழ்க்கை
*

யாருடைய கிரீடத்தில்
முட்கள் இல்லை -

மனமுவந்து ஏற்கிறேன்
பரிசுகளைப் போலவே
தண்டனைகளையும்

மகிழ்வைப் போலவே
துக்கத்தையும்

உணவைப் போலவே
கழிவையும்

பாராட்டைப் போலவே
பரிகசிப்பை

வெறும் சிலைகளால்
ஆனதல்ல இவ்வுலகம்,
அது மலைகள் நிரம்பியது.

*


ங்கிருந்து தொடங்குவது
கிண்ணத்தில் அமிர்தம்
எந்தப் பக்கம் அருந்தினாலென்ன
எல்லாமும் அதே ருஸி

உன்னை அருந்துகிறேன்

உயரங்களை விட
உயரமாகிறோம்
ஆழங்களை விட
ஆழமாகிறோம்
காதலில் விழுந்து

நீயற்று
உனது காரைக் கடக்கும்போதும்
உணருகிற செல்லத் தவிப்பு -
ஒருபோதும்
உனது பொருள்கள்
அஃறிணை யல்ல

கொஞ்சம் மழை
கொஞ்சம் கடல்
கொஞ்சம் வானம்
கொஞ்சம் பூக்கள்
கொஞ்சம் பறவைகள்
சிறிய வானவில்
நிறைய்ய்ய்ய நீ-
வாழ்வின் முழுமைக்கு.
*

ரு அலைபேசி எண்ணைத் தொலைப்பது
ஒரு மனிதரைத் தொலைத்ததாகிறது -
என்னைத் தொலைக்கிறாய்

*
ன் அன்பை
உனக்குத்
தெரிவிக்க முடியாமலே போகிறது -
கைகளற்றவரின் ரேகைகள்
எதைச் சொல்லும்?
*


ஞாபகமிருக்குமா கடவுளுக்கு,
மனிதனின் அத்தனை தவறுகளும்???
*

ரு தனிமைப் பெண்ணும்
மாலைநேரச்சூரியனும்
கடற்கரைக்குப் போனார்கள்
யாருக்கு அதிக தனிமை
என்று பேச்சு வந்தது
யார்தான் தனியா யில்லை
என்று முடிவானது
*
மலைகள்.காம் (ஆக 18, 2012)

No comments:

Post a Comment